Monday, December 21, 2009

நான் மனிதனல்ல

துஷ்டனைக் கண்டால்
தூர விலகு.
விலகினேன்.
கோழை என்றனர்!

அன்பாய் பேசும்
அத்தனை பேருக்கும்
அடி பணிந்தேன்
அறிவிலி என்றனர்

பெண்களை கண்டால்
சகோதரிகளாக நினைத்து
பார்வை திருப்பினேன்
தரம் பிரித்தார்கள்
ஆணுக்கும் , பெண்ணுக்கும்
இடை ஜாதியென்று

சத்தியம் பேசினேன்
வக்கன்னை செய்தனர்

கடமையில் கண்ணாக இருந்தேன்
பிழைக்க தெரியாதவன்
என்றனர்!

என்னை
மனிதனென்று சொல்ல
யாரிகிங்கே?

4 comments:

  1. SEthuuuuuuuu...... ithu unga poem-a?? nan kuda enga irundho suttadhunu nenachen.. EKSI?????


    என்னை
    மனிதனென்று சொல்ல
    யாரிகிங்கே?

    Yaaro periyavanga kobathula sonnatha unga profile-a vachurukinganu nenachen.. :o

    Too gud..... keep it up...

    ReplyDelete
  2. super .... :D , ithukku mela vaarththaigal illai solla......

    ReplyDelete