நீ
செய்தால்
'சூழ்ச்சி'
நான்
செய்தால்
'ராஜதந்திரம்!'
பிடித்தவன்
பருத்திருந்தால்
'கொஞ்சம் தாட்டி!'
பிடிக்காதவன்
பருத்திருந்தால்
'தீவட்டித் தடியன் !'
மனதுக்கு பிடித்தவள்
மெலிந்திருப்பின்
'ஸிலிம்!'
கண்டுக்காதவள்
மெலிந்திருப்பின்
'ஈர்க்குச்சி !'
கொடுத்தால்
'லஞ்சம்'
வாங்கினால்
'அன்பளிப்பு!'
ஒ!
ஒளியவும்
ஒழிக்கவும்
தடுக்கவும்
தாக்கவும்தான்
இங்கே
கொட்டிக் கிடக்கிறதே
வார்த்தை
Subscribe to:
Post Comments (Atom)
Xcellent da sethu :)
ReplyDelete:-))))))))))
ReplyDeletevery nice sethu... :) super . muthal padaippunnu oththukkave mudiyaathu.....
ReplyDelete